தவளகுப்பம் மாரியம்மன் கோயில்திருப்பணிக்கு நன்கொடை முன்னாள் சேர்மேன் ஆனந்தன் வழங்கினார்
அரியாங்குப்பம் கொம்யூன் தவளக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன், காளியம்மன், பெருமாள் திருக்கோயில்கள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெறுகிறது, இதில் ஆளுநர் , முதல்வர், சபாநாயகர், மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
அதனை முன்னிட்டு கோயில் திருப்பணிகள் விரைப்படுத்தப்பட்டுவருகிறது. அதனை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மேன் ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டு கோயில் திருப்பணிக்காக அறங்காவல் குழுவினரிடம் நிதி உதவி வழங்கினார். அப்போது கோயில் திருப்பணிக்குழுவினர், அறங்காவல் குழுவை சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.