வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற் சங்கம் டிசிடியூ சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் காங்கிரஸ் தொழிற் சங்கம் டிசிடியூ சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினம் திருவாரூர் மாவட்ட டிசிடியூ தலைவர் குலாம் மைதீன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி
அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அந்தோனி சாமி, ஸ்டாண்ட் கண்ணன், மருத முத்து, மகளிர் அணி உமா மகேஸ்வரி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.