வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிர் குழு கடன் தவறாமல் திருப்பி செலுத்திய5 குழக்களுக்கு ரூ 24.22 லட்சம் கடன் தொகையை வங்கி தலைவர் சா. குணசேகரன் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம்மகளிர் குழு கடன் தவறாமல் திருப்பி செலுத்திய உண்ணாமுலையம்மன் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ 4.80லட்சம் ,மகாமாரியம்மன் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ. 4.80லட்சம், புரட்சி தலைவி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ. 4.80லட்சம், காந்திஜி அம்மன் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ. 4.98லட்சம், ஸ்ரீ தேவி மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ 4.84 லட்சம் ஆக கூடுதல் ரூ. 24.22 லட்சத்திற்கான கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் மாற்ற தக்க காசோலைகளை வங்கி தலைவர் சா. குணசேகரன் வழங்கினார். உடன் சங்கத்தின் உதவி செயலாளர் எம். உ லோகநாதன், எழுத்தர் ஆர். அன்பரசன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.