தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சியில் இன்று ஊரக வளர்ச்சி துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணி மற்றும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குவதற்காக குப்பை தொட்டிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களுக்கு வழங்கினர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில், கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு, ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.