பள்ளிக்கல்வித்துறையில் இன்று நடைபெற இருந்த பணி நிரவல் கலந்தாய்வினை கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஆசிரியர் மாணவர்கள் நலன் சார்ந்து பணி நிரவல் கலந்தாய்வு ஒத்தி வைக்க வேண்டும்.
என்ற வேண்டுகோளை பரிசீலித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பணி நிரவல் கலந்தாய்வினை ஒத்திவைத்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் மனதில் மகிழ்ச்சியை உண்டாகிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களை அவருடைய இல்லத்தில் நேரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.