தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேற்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் விவசாயி இடம் பப்பாளி பழத்தை மாவட்ட ஆட்சியர் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார். இந்த ஆய்வின் போது வேளாண்மை துறை அலுவலர் முருகதாஸ் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் உட்பட பலர் உடனிருந்தனர்..