தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்கக் கோரி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல் அமைச்சர் கூறும்போது, தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் பிரச்சினைகள் எழுகின்றன. நாட்டில் பால் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் அமுல் நிறுவன நடவடிக்கை, நுகர்வோர் மத்தியில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுக்கவேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.