தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் தொடர்பான பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழக அரசின் சாதனை மலர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இதில் தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமரச்சர் ஏ.வ வேலு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சாதனை மலர் வெளியிட உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் உட்பட பலர் உடனிருந்தனர்.