விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை மதிய உணவு வழங்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்கம் கோவை மாவட்ட மாணவரணி சார்பாக கோவை அரசு மருத்துவமனை முன்பாக மதிய உணவு வழங்கப்பட்டது..

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில்,மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,செயலாளர் பூமார்க்கெட் கார்த்திகேயன் பொருளாளர் ராஜா பொறுப்பாளர் பஷீர் துணைத் தலைவர் மாரி ராஜ் துணை செயலாளர் ஆசிக் இணை செயலாளர் சதீஷ்குமார் அருண்குமார் அமைப்பாளர் செந்தில்குமார் கௌரவ ஆலோசகர் பிரசாந்த் செய்தி தொடர்பாளர் சோமனூர் ராஜா துணை அமைப்பாளர் சரவணன் ஆலோசகர் ரோஹித் நிர்வாகி நவீன் குமார் வினோத் மற்றும் குறிச்சி கௌதம் சிங்கை நகர மாணவரணி தலைவர் தளபதி சுரேஷ் செயலாளர் மாஸ்டர் சதீஷ்குமார் பொறுப்பாளர் சுந்தரதாஸ் நிர்வாகி சஞ்சய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல சூலூர்,கருமத்தம்பட்டி,செல்வபுரம்,சிங்கை நகரம்,கணியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிகளில், சுந்தர் கணேஷ் , மகளிரணி தலைவி மோகனப்பிரியா சிங்கை நகர மாணவரணி தலைவர் சுரேஷ் செல்வபுரம், சுரேந்தர் மற்றும் வசந்த்,கணியூர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *