காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியிலும் மிதமான அளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 2463 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 2787 கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.72 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று103.78 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *