விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் வேம்பூண்டி கிராமத்தில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் V.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. பெலாகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் பூங்கா.பாக்யராஜ் வரவேற்றார்.வேம்பூண்டி கிளைச் செயலாளர் சக்திவேல் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜா,பிரதாப் தொடக்க உரை ஆற்றினர்.
ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தகுமார் ஒன்றிய துணை செயலாளர் சித்ரா ஏழுமலை ஆசிரியர் குப்புசாமி, வேம்பூண்டி கிளை செயலாளர்கள் ஜெயகிருஷ்ணன் ரமேஷ் கலியமூர்த்தி,முட்டியூர் கிளைச் செயலாளர்கள் கருணாகரன், சௌந்தரராஜன்,பலா குப்பம் கிளை செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.திமுக தலைமை கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து பொது மக்களிடையே விரிவாக எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ வும் மாநில தீர்மானக் குழு துணை தலைவருமான டாக்டர் மாசிலாமணி மாநில தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், மயிலம் ஒன்றியக் குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், ஊராட்சி குழு உறுப்பினர் மகேஸ்வரி குமரேசன், மாவட்ட சிறுபான்மை அணி K.S.அன்சாரி உட்பட மயிலம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் வேம்பூண்டி ,பெலா குப்பம், முட்டியூர் கிளை பிரதிநிதிகள், பெலாகுப்பம் ஊராட்சி இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக வேம்பூண்டி கிளை பிரதிநிதி விஜயகுமார் நன்றி கூறினார்