ராசிபுரம் அருகேயுள்ள ரெட்டிப்புதூர் ஸ்ரீ குருகுலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சேலம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை , ராசிபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து இந்த இலவச கண் மருத்துவ முகாமை நடத்தின.
முகாம் துவக்க விழாவில் பள்ளி முதல்வர் டாக்டர் சுகந்தி அனைவரையும் வரவேற்றார்.
ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் கே. எஸ். கருணாகர பன்னீர் செல்வம் செயலாளர் ஜி.தினகர், திட்டச் சேர்மன் பி.கண்ணன் , மூத்த உறுப்பினர் வெங்கடாஜலபதி ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர். முகாமில் 60க்கும் மேற்பட்டவர்கள்கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.
முன்னதாக மாணவர்களிடையே நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் கே .எஸ்.கருணாகரபன்னீர் செல்வம் சான்றுகள் வழங்கினார்.