வலங்கைமான் அருகில் உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் அமைந்துள்ள மதுபான கடையை 8வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் உள்ள கடைஎ:9847 மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் ஜி. பி. மணிகணடணிடம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.
அதன் பின்னர் ஊராட்சி மன்றத் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கு வெற்றி பெற்றது.இன்னும் 8வாரங்களுக்குள் மதுபான கடையை அகற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு
உள்ளார்கள். இது கோவிந்தகுடி ஊராட்சிக்கு மாபெரும் வெற்றி என்று கோவிந்தகுடி ஊராட்சி மன்றத் தலைவர் ஜி. பி. மணிகண்டன் தெரிவித்தார்.