(வி. தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி)
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய பிரதேசம் போபால் நகரில் இருந்து காணொளி வாயிலாக நேரலை நிகழ்ச்சியில் தேசம் முழுவதும் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காணும் வகையில் இன்று காலை 11 மணிக்கு துவங்கி நடைபெற்றது நேரலை நிகழ்ச்சியில் என்னுடைய பூத் வலிமையான பூத் என்ற நோக்கத்துடன் அனைத்து நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்
புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாரதப் பிரதமரின் நேரலை காணொளி நிகழ்ச்சியை அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் அவரவர் தொகுதிகளில் உள்ள நிர்வாகிகளுடன் பார்த்தனர்
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் லாஸ்பேட் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகத்தில் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நேரலை நிகழ்ச்சியை பார்த்தார்
காணொளி மூலமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உரையை லாஸ்பேட் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாநில தலைவருடன் லாஸ்பேட் சட்டமன்ற தொகுதி தலைவர் சோமசுந்தரம் தொகுதி பொறுப்பாளர் தண்டபாணி பாஜக மாநில செயலாளர்கள் திருமதி லதா திருமதி ஜெயந்தி மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் திருமதி கனகவல்லி குமரன் நகர் கேந்திர பொறுப்பாளர் சீனிவாச பெருமாள்
உழவர் மாவட்டத் துணைத் தலைவர் முருகன் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி வள்ளி உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பாரத பிரதமர் உரையை கேட்டனர்.