புதுவை அருங்காட்சியகத்தில் புதுவை- பிரெஞ்சு இடையிலான 300 ஆண்டுக்கும் மேலான உறவை நினைவூட்டும் அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. 7-ந் தேதி தொடங்கிய கண்காட்சி வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கண்காட்சியை பார்வை யிடலாம். பிரான்சிலும், பிரான்சின் பிற உறவு தேசங்களிலும், புதுவை மக்களும், இந்திய மக்களும் குடியேறி அந்தந்த நாடுகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றர். அதேபோல பிரான்ஸ் மக்கள் இந்தியாவில் புதுவை உள்பட பல மாநிலத்தில் வாழ்கின்றனர். இரு நாடு உறவை போற்ற பிரான்ஸ் தேசிய விடுதலை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதை பெருமை ப்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு ள்ளது. இருநாடு உறவுகளை பிரதிபலிக்கும் தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி முன்னாள் நீதிபதி டேவிட் அன்னுசாமி வாழ்த்துரையுடன் தொடங்கியது. பிரான்சு நாட்டை சேர்ந்த பாவாடை கலியபெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனூர் வெங்கடேசன், மற்றும் அமைப்பாளர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருங்காட்சியக இயக்குநர் அறிவன் தலைமை யில் ஒருங்கிணைப்பாளர் மனோ ரஞ்சினி திருநாவுக்கரசு செய்திருந்தார்.