ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்


கூட்டுறவு துறையின் சார்பில் விற்பனையாளர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்த விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்குதல் தொடர்பான பயிற்சி கூட்டம்
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்த விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்குதல் தொடர்பான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.


பின்னர் இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவதுநியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் தங்களது கடையில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தேவையான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நியாயவிலைக்கடை விற்பனையாளரும் தங்களது பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு, ஒவ்வொரு தெருவாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தில் வீடுகளுக்குச் சென்று வழங்கவேண்டும்.

விண்ணப்பத்தில் அந்த குடும்பத்தின் குடும்ப அட்டை எண்ணைக் குறித்து வழங்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு குடும்பத்தினர் பயன்படுத்தக்கூடாது.

எந்தவித நிபந்தனையிமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விண்ணப்பம் வழங்கவேண்டும்
விண்ணப்பம் வழங்கியபின்னர்

அக்குடும்ப உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை கையொப்பம் பெறவேண்டும். இந்த ஒப்புகை பெறுவதற்காக ஒவ்வொரு நியாயவிலைக்கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் விவரம் பொது விநியோகத்திட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு அச்சத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பம் வழங்கும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்த அறிக்கையினை அனுப்பி வைக்கவேண்டும். ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் விண்ணப்பங்களை வழங்காமல், தேதி நிர்ணயம் செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் பதிவு செய்யத் திட்டமிடப்பட்ட அளவிற்கு மேற்படாமல் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களில் பயனாளிகள் வருகை புரிய வேண்டிய தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறித்துக் கொடுக்க வேண்டும். விண்ணப்பம் பதிவு முகாமானது வருகின்ற 24ம் தேதி தொடங்குகிறதுகாலை 9.30 மணி முதல் 01.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்படும். ஒவ்வொரு முகாமிற்கும் 60 அல்லது 80 நபர்கள் இரு பகுதி நேரங்களில் வருவார்கள்.

முகாம் நடைபெறும் இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்த்திட வேண்டும். இதற்கு ஏற்றவகையில் விண்ணப்பப் பதிவுச் சீட்டுகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய நேரங்களைக் குறித்துத் தர வேண்டும்குடும்ப அட்டைதாரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் வர இயலாத குடும்ப அட்டைதாரர்களுக்காக முகாம் நாளின் கடைசி இரண்டு நாளில் வரவேண்டும்

ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் எந்தெந்த நாட்களில்எந்தெந்தத் தெருக்களில் வசிக்கும் குடும்பங்களின் விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்படும் என்ற விவரத்தை ஒரு தகவல் பலகையாக நியாயவிலைக்கடையில் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப்படுத்தவேண்டும்

விண்ணப்பங்களை பெறும் தன்னார்வலர்கள் ஒருநாளைக்கு எவ்வளவு பதிவு செய்ய இயலும் என்ற அடிப்படையில் அதற்கு ஏற்றவாறு வழங்கப்பட வேண்டும் பொது விநியோகத்திட்டத்தில் ரேஷன் பொருட்களை வாங்காத அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் வீட்டுக்குச் சென்று விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் வழங்கத் தேவையில்லை அத்தகைய குடும்பத்தினர் கலைஞர் மற்றும் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்யவிருப்பப்பட்டால், விண்ணப்பங்களை நியாயவிலைக்கடைகளில் நேரடியாக வந்து பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் நீங்கள் குடும்பத்திலுள்ள யாரிடம் வேண்டுமானாலும் அளிக்கலாம்.

ஆனால் முகாம் நாளன்று திட்டத்திற்கு பதியப்படவுள்ள பெண் குடும்பத்தாரர் கண்டிப்பாக வர வேண்டும்பெண் குடும்பத்தாரர்ருக்கு கை ரேகை பதியப்படவுள்ளது. கை ரேகை பதியப்படாத முடியாத முதியோர்கள் இருப்பின் அவர்கள் அவர்களது முகாம் நாளன்று ஆதார் பதிவேற்றம் செய்யப்பட்ட தொலைபேசி எண்ணினை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் தொலைபேசி எண்ணிற்கு வருகின்ற ஒடிபி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்
நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ராவருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *