நாமக்கல்
முன்னாள் தமிழக முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி நாமக்கல்லில் சட்ட மன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
நாமக்கல் நேதாஜி சிலை அருகே இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் நாமக்கல் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவுத்தூண் வழியாக நாமக்கல் கடைவீதி மற்றும் நாமக்கல் அண்ணா பேருந்து நிலையம் மணிக்கூண்டு வழியாக வந்து மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே முடிந்தது
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.