கோவையில் நடைபெற்ற சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் கூட்டமைப்பின் நடன போட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர்,பாவ்னி ஜோடி கலந்து கொண்டனர்..
கோயமுத்தூர் சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் கூட்டமைப்பின் 44 வது ஆண்டு பள்ளிகளுக்கான நடன போட்டிகள் கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள பெங்க்லன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிஷேக் ஜாக்சன் தலைமையில் நடைபெற்ற இதில்,பள்ளியின் தாளாளர் ஃப்ராங்க் டேவிட்,முதல்வர் மார்கரேட் தேவ கிருபை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கோவை,திருப்பூர்,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு நடனமாடினர்.
இதில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும்,பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறிக்கும் விதமாக நடைபெற்ற நடனங்களில் ,இறுதியாக பாரதமாதா வெகுண்டெழுந்து குற்றவாளிகளை தண்டிப்பது போன்று தத்ரூபமாக வெளிப்படுத்தினர்..
ஒவ்வொரு நடனங்களிலும் முற்றிலும் மாணவிகளே கலந்து கொண்டது குறிப்பிடதக்கது…நிகழ்ச்சியில் சிறந்த நடன குழுவினருக்கு பரிசுகளை பாவ்னி,அமீர் ஆகியோர் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.முன்னதாக பிக்பாஸ் ஜோடியான அமீர் பாவ்னி செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது தான் இயக்கும் புதிய படத்தில் பாவ்னி நடித்து வருவதாக கூறிய அமீர்,அண்மையில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி சார் அவருக்கே உரிய ஸ்டைலில் புதிய பரிமாணத்தில் மாஸ் காட்டியுள்ளதாக கூறினார்..சினிமாவை தொடர்ந்து வெப் சீரிசில் நடிப்பது அடுத்த லெவலுக்கு செல்வதை போல உணர்வதாக பாவ்னி தெரிவித்தார்…