எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி.
சீர்காழியில் 5000 கடைகள் அடைத்த வணிகர்கள்.காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி போராட்டத்திற்கு ஆதரவாக கடையடைப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும் காவிரி நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்து.டெல்டா பகுதிகளில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார், கொள்ளிடம் ,உள்ளிட்ட பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் தங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கர்நாடக அரசுக்கு மத்திய அரசுக்கு எதிர்பு தெரிவித்தும் கடைகளை அடைத்துள்ளனர் .பால் மருத்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது