மடுகரையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் சுப்பராயக் கவுண்டர் 30-ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
செய்தியாளர். ச.முருகவேல். நெட்டப்பாக்கம், புதுச்சேரி
நெட்டப்பாக்கம்.அக்.13. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். சுப்புராயக் கவுண்டர் 30 ஆம் ஆண்டு நினைவஞ்சலி மடுகரையில் அனுஷ்டிக்கப்பட்டது. மடுகரையில் உள்ள மாவீரன் சுப்புராயக்கவுண்டர் சதுக்கத்தில் அவரது உருவப்படத்திற்கு, தீபாராதனைகள் காட்டப்பட்டது.
காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரகாசம் ரெட்டியார், வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் அம்மைநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி ஆகியோர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செய்தனர். அதனைத்தொடர்ந்து சுப்புராயக்கவுண்டர் சிலைக்கு காங்கிரஸ்கட்சி மூத்த நிர்வாகி ராஜகாபால், பிரகாசம்ரெட்டியார், அம்மைநாதன், விஜயவேணி மாலை அணிவித்தனர்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பில் முதல் மூன்று இடம்பிடித்த மூன்றுபிரிவு மாணவர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து 500 ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஜெயராம்ரெட்டியார், எம்.ஆர்.ஜெகந்நாதன். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் அனுசுயா, முருகன், இருசப்பன், குழந்தைவேலு, ஜெயராமன், பரதன், கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார், சரவணன், சேகர், அருணாச்சலம், நிரஞ்சன், சக்திதரன் உட்பட திரளாக பலர் கலந்துகொண்டனர்.