மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு சொந்த ஊரான காளையார் கோவிலில் உற்சாக வரவேற்பு.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் காளையார் கோயிலில் பிளஸ் டூ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஜாய் நடாஷா. கோகோ போட்டி வீரரான இவர், கடின பயிற்சிக்கு பிறகு தனது திறமையை வெளிப்படுத்தி, இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த வாரம் மலேசியாவில் உள்ள மலாக்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கோகோ போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

தங்கப்பதக்கம் என்ற கோகோ வீராங்கனை ஜாய் நடாஷாவிற்கு அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் காளையார் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பேண்டு வாத்தியங்கள் முழங்க அவர் படித்த பள்ளிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

பின்னர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணவி ஜாய் நடாஷா ஆறாவது வகுப்பு படிக்கும் போது இருந்து கோகோ பயிற்சி பெற்றதாகவும், டெல்லியில் 15 நாட்கள் சிறப்பு விளையாட்டு முகாமில் பயிற்சி பெற்று மலேசியா சென்று மலாக்காவின் நடைபெற்ற சர்வதேச போட்டியில் தங்கம் வென்றதாகவும், தனக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்திய அணியில் தமிழகத்திலிருந்து இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் தான் சிறப்பாக விளையாடி சாம்பியன் கோப்பையை வென்றதாக தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கோகோ விளையாட்டையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசிற்க்கு கோரிக்கை விடுத்தார்.

பேட்டி: ஜாய் நடாஷா (கோ-கோ வீராங்கனை)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *