பண்டி காவனூர் ஊராட்சி சித்தி விநாயகர் நகர் கிராமத்தினர் கட்டிய கோவில் கும்பாபிஷேகம்.
திருவள்ளூர்
பண்டி காவனூர் ஊராட்சியில் உள்ள சித்தி விநாயகர் நகர் கிராமத்தில் கிராம மக்கள் நிதி உதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்டி காவனூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள சித்தி விநாய கர் நகர் பகுதியில் கிராம மக்கள், பக்தர்கள் நிதி உதவியுடன் அண் மையில் புதிதாக அருள்மிகு ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஆலயம் கட்டப் பட்டு தற்போது கும்பாபிஷேகத்தி ற்கான பணிகள் நடைபெற்று வந்தன அதனைத் தொடர்ந்து கடந்த 31 ம் தேதி பந்தக்கால் அமைக்கப்பட்டு கோ பூஜை கணபதி ஹோமம் தொடங்கி நவகிரக ஹோமம் கோ பூஜை முதல் காலயாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்று வந்து மகா தீபாரத னை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப் பட்ட புனித நீரை சிவாச்சரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தினர் அப்போது கூடி இருந்த பக்தர்கள் சித்தி விநா யகரை வணங்கி சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் திரா ளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை பண்டி காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார், கிராமத்தி னர் மணி, மதியழகன், ராஜா, பாலமுருகன், கோவில் நிர்வாகி கள் ஜெயவேல், சதீஷ், மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வெங்கடேசன், சங்கர்,கண்ணன், தக்ஷிணாமூர்த்தி, உள்ளிட்ட முக்கி ய பிரமுகர்கள் பங்கேற்றனர் முடிவில் பக்தர்களுக்கு பிரசாத ங்கள் வழங்கப்பட்டன. பின்னர் நன்கொடையாளர்களுக்கு கலசங் கள் வழங்கப்பட்டன.