எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே ஊராட்சி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை.மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தியம்பேட்டை ஊராட்சியில் ஊராட்சி உள்ளாட்சி தினத்தை ஒட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகா பாரதி கலந்துகொண்டார்.
ஊராட்சி செயலர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது பொதுமக்கள் பேருந்து நிழற்குடை,அரசு பள்ளி அமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.
மேலும் நீண்ட நாட்கள் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,புத்தூர் மாதானம் சாலையில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றித்தர கோரிக்கை விடுத்தனர்.
அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.சமுகநலம் மற்றும் மகளீர் உரிமைதுறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.