பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே தனியார் பள்ளியில் 30 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி காண்போரை கண் கவர வைத்தது…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரியில் அமைந்துள்ள தான்ஸ்ரீ உபயதுல்லா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி பட்டிமன்றம் பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதில் அப்துல் கலாம் போல் வேடமணிந்து அவரின் திறமையின் புகழை நிலைநாட்டும் விதமாக மாணவர்கள் செய்து காட்டினர் மாணவர்களின் கலை நிகழ்ச்சி காண்போரை கண் கவர வைத்தது. மேலும் சிறப்பு அழைப்பாளராக பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் முதல்வர் ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.