தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குருவிகுளத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலை வகித்து பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் ஏ.டி.சி. தனபால் கலந்து கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களை சரிபார்த்து ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
இதில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன் என்ற ராஜீ, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், குருவிகுளம் நகர செயலாளர் மோகன்சாமி, தென்பகுதி கிளை செயலாளர் குழந்தைசாமி, குளக்கட்டாகுறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அமுதா பாலசுப்பிரமணியன் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.