ஆலங்குளத்தில் மானியத்தில் சுழற்கலப்பை வழங்குதல் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டமான வேளாண் இயந்திர மயமாக்கும் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் சுழற் கலப்பை வழங்குதல் நிகழ்ச்சி
ஆலங்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் வைத்து தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் .ஊமைத்துரை தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம். திவ்யா மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மானிய விலையில் ரூபாய் 10. லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு சுழற்கலப்பை வழங்கினார்.
நிகழ்வில் ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன் ,தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் ஆலோசகர் வெங்கடசுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் சண்முகப்பிரியா, உதவி வேளாண்மை” அலுவலர்கள் செந்தில்குமார், கணேசன், புஷ்பமாரி,கோமதி, சுழற் கலப்பை சர்வீஸ் நிறுவன மேலாளர் கெளவுரிசங்கர், மேற்பார்வைளர்,
அஜய்குமார் மற்றும்
விவசாயிகள் கலந்து கொண்டனர்.