பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே திரு.ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டி கண்களில் கருப்பு துணியை கடி கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்ட ஆர்ப்பாட்டம் …….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கரும்பு விவசாயிகள் திருமண்டங்குடியில் அமைந்துள்ள, திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாயை இந்த ஆலையை தற்போது விலைக்கு வாங்கியுள்ள கால்ஸ் டிஸ்லரிஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தினசரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், 353வது நாளான இன்று, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தியும், கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தை கண்டிக்கும் வகையில் கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலை முன்பு கண்களில் கருப்புதுணி கட்டி கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், மேலும் சர்க்கரை ஆலைக்கு எதிராக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோஷங்கள் இட்டு, கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *