மாதவரம் ஊராட்சி அரசு பள்ளி யில் புதிய சமையலறை கட்டிடம் திறப்பு.

திருவள்ளூர்

மாதவரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது மாதவரம் ஊராட்சி இந்த ஊரா ட்சி உள்ள சயனாவரம் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் உள்ள சமையலறை கட்டிடம் பழுத டைந்து நிலையில் இருந்தது. இதனையடுத்து சோழவரம் ஒன்றி யம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரா ட்சி துறை சார்பில் மேற்கண்ட பகுதிக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தி ன் கீழ் 2023–2024 நிதியாண்டின் முலம் ₹7.43 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் கட்டப் பட்டது.

இக்கட்டிடம் நேற்று திறந்து வைக்க ப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி சுந்தரமூர் த்தி, மாதவரம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் சுரேஷ், துணைத் தலைவர் மீனாட்சி பாண்டியன், தலைமை ஆசிரியர் கௌசல்யா, மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *