கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தனியார் அரங்கில் விஷ்வ பாரத் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

இதில் பாபுஜி அவர்கள் பேசும்போது மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மனு அளித்தோம் தமிழக முழுவதும் விஸ்வகர்மா 85 லட்சம் பேர் உள்ளனர் இதில் தங்க வேலை செய்பவர்கள் சிற்ப வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்

நவீன காலகட்டத்தில் பல்வேறு இடையூறுகள் உள்ளதால் வேலையில்லாத சூழ்நிலையில் தற்போது காணப்படுகின்றனர் நாங்கள் ஐந்து அம்ச கோரிக்கையில் வைத்துள்ளோம் குழந்தை கல்வி அவர்களுக்கு மூன்று புள்ளி ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் அதேபோல பட்டறை வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் முக்கிய தொழிலான தங்க நகை கூட்டுறவு வங்கியில் தங்க பரிசோதகர் நய மனம் செய்ய வேண்டும் வீடு இல்லாமல் இருக்கும் விஸ்வகர்மா பெண்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் தனி வீடு கொடுக்க வேண்டும் அதேபோல விஸ்வகர்மா தொழில் முன்னேற்றத்திற்காக தொழில் தொடங்க 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் கடன் உதவி தர வேண்டும் எங்களுக்கென சட்டமன்றத்தில் பேசுவதற்கு ஆள் இல்லை வருங்காலத்தில் இது பற்றி ஆலோசனை நடத்துவோம் இந்த கட்சியானது 80 சதவீதம் விஸ்வகர்மாவிற்கும் இருபது சதவீதம் பொது ஜனத்திற்கும் நாங்கள் பாடுபடுவோம் என தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *