பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசத்தில் விவேகானந்தரின் பிறந்தநாள் விழா கோலப்போட்டி..
சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சிறுதானிய உணவு நன்மைகள் குறித்து அசத்தலாக போடப்பட்ட கோலங்கள்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் சார்பில், விவேகானந்தரின் 162-வது பிறந்தநாள் விழா மற்றும் இளைஞர் எழுச்சி விழாவினை முன்னிட்டு, பெண்களுக்கான கோலப்போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் சுற்றுப்புற தூய்மையின் பயன்கள், சிறுதானிய உணவுகளின் நன்மைகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் உட்பட சுற்றுப்புற சூழ்நிலைகளை பாதுகாக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விதவிதமான வண்ண கோலங்களை போட்டு பெண்கள் அசத்தினர். பெண்களால் போடப்பட்ட இந்த கோலங்கள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் இருந்தது.