தேவேந்திர பேனாக்கள் நிறுவனர் பாலசுந்தரம். பங்கேற்பு;-

தென்காசி மாவட்டத்தில் , ஆலங்குளம் அருகே காவலாக்குறிச்சி கிராமத்தில் பொங்கல் திருநாள் விழா மற்றும் ஏர் உழவர் திருநாள் நாடெங்கும் சிறப்பாக நடந்து வருகிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காவலாக்குறிச்சி கிராமத்தில் ஊர் நாட்டாமைகள் தலைமையில் பொங்கல் விழா நடைப்பெற்றது

இவ் விழாவில் தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் டி.சி.பாலசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியும் இனிப்புகளை வழங்கி எழுச்சி உரையாற்றினார்.

இவ்விழாவில் நாட்டாமைகள், ஊர் பொதுமக்கள்,மற்றும் தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் சாம்பை பாஸ்கர், கடையம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சங்கரநாராயணன்,தென்காசி ஒன்றிய தலைவர் திருக்குமரன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் மணிகன்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *