கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் ஜெகதேவியில் பாக முகவர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் பாக முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஜெகதேவியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பர்கூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.அறிஞர் வரவேற்புரை ஆற்றினார்,

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வளங்கள் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கலந்து கொண்டு கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். அப்போது அமைச்சர் அர. சக்கரபாணி பேசியதாவது: வரும் பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் அவர்களுக்கு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.சி.நாகராஜ்,பாலன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், ஒன்றிய கழக செயலாளர் காவேரிப்பட்டினம் ஆதி மகேந்திரன்,பர்கூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஜி.ராஜேந்திரன், போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ்.பாலாஜி, ஒன்றிய குழு உறுப்பினர் அப்சர்பேகம் சான்பாஷா உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகதேவி ஜெயந்தி ராதாகிருஷ்ணன், பாப்பாரப்பட்டி மகேஸ்வரி சங்கர், குட்டூர் பெருமாள், கீழ் குப்பம் சண்முகானந்தம், வெப்பாலம்பட்டி சக்திவேல் உள்பட பாக முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் 7000-க்கும் மேற்பட்ட முகவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் பரிசுகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் எம் எல் ஏ ஆகியோர் வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *