-கொள்ளி போட பெற்ற மகன் ஈமச்சடங்கை கணினியில் பார்த்து அழுதான் அமரிக்காவில்

உனக்காக உயிரையே தருவேன் என்ற காதலன் அவன் திருமண அழைப்பிதழ் தந்தான்

தாய்ப்பால் தரவேண்டியவள் கள்ளிப்பால் தந்தாள் தான் பட்ட கஷ்டம் தன் மகள் அடைய, வேண்டாம் என்று

அழுக அழுக பள்ளியில் சேர்த்தேன் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு செல்கிறான் மகன்

பட்டம் வாங்கி விட்டு கனவு கண்டவன் டாஸ்மார்க்கில் பிராந்தி விற்கிறான்

இறந்த பின்னும் இயற்கையை ரசிதுப்பார்தான் விழிக்கொடை தந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *