திருவொற்றியூர் ராமநாதபுரம் சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு போதை விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவொற்றியூர்

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல்துறை துணை ஆணையாளர் ஜெயலட்சுமி போக்குவரத்து காவல்துறை எண்ணூர் சப் இன்ஸ்பெக்டர் நரேஷ் சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் ஃப்ரேம் நாஸ் தலைமை ஆசிரியர் முத்துச் செல்வி பள்ளி ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது

இதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள ராமநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் முத்துச் செல்வி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளிகளின் அருகே உள்ள கடைகளில் போதை பொருட்களான போதை சாக்லேட் மற்றும் அரசு தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் அவைகளை கண்டுபிடித்து ஆசிரியர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும் இதேபோன்று சக நண்பர்கள் யாரேனும் போதை வஸ்துக்களை பயன்படுத்தினால் அது குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு பதாகைகளுடன் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது

இதில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர் திருவொற்றியூர் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மணலி விரைவு சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் தலை கவசம் அணிவது குறித்து வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *