விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனம் தாகூர் மேல்நிலைப் பள்ளி 50-ஆம் ஆண்டு பொன்விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா தாகூர் கல்விக் குழும சேர்மன் கங்கா ராஜாபாதர் தலைமை தாங்கினார்.
பள்ளியின் துணைச் சேர்மன் ரபீந்திரநாத் தாகூர், செயலாளர் தேவேந்திர நாத் தாகூர் முன்னிலை வகித்தனர்.இணைச் செயலாளர்கள் விஜயலட்சுமி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.
செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் மஸ்தான், முன்னாள் எம்.பி., குழந்தைவேலு, திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.விழாவில், பள்ளியில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் டிரஸ்டி தினகரன், இணைச் செயலாளர் சுகர்நாத், தி.மு.க., பொதுக் குழு உறுப்பினர் கதிரேசன், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், பாஸ்கர், பள்ளி தலைமையாசிரியர் லலிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்னர்.