சிவகங்கை மாவட்டத்திற்குள் கால் வைக்க முடியாது என மிரட்டிய எம்எல்ஏ செந்தில்நாதனின் ஆவேச பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. கார்த்திக் சிதம்பரம் பேட்டி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த கார்த்திக் சிதம்பரம், நான் எந்த ஒன்றிய செயலாளர்களையும் போனில் மிரட்டவில்லை, எம் எல் ஏ செந்தில்நாதன் இவ்வாறு கடுமையான வார்த்தைகளில் பேசுவார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை, அவர் ஆவேசத்தில் பேசியதாக கருதுகிறேன் அவரின் பேச்சை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.