கம்பம் செய்தியாளர் வி பாஸ்கரன்.
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா உற்சாககொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் 21 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்
இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது கம்பம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனான அக்கினி சட்டி எடுத்தல். ஆயிரங்கண் பானை எடுத்தல் உருண்டு கொடுத்தல் அழகு குத்துதல் பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
இதன் படி கடந்த புதன்கிழமை 24/4/2024 கௌமாரியம்மன் பூசாரி குடும்பத்தார்கள் சார்பில் முதல் தீச்சட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் பூசாரி தீச்சட்டி ஏந்தி நகரில் பிரதான வீதிகள் வழியாக நகர் வலம் வந்தனர்.
இதன்படி பூசாரி நகர்வலம் வரும் பொழுது துஷ்ட தேவதைகள் பின் தொடர்ந்து வருவதாகவும் அதனை தடுக்கும் விதமாக இரண்டு முக்கிய வீடுகளில் நீராகாரம் அருந்தி சேவல் காவு கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது
இந்த விழாவில் ஏராளமான பொதுமக்களும் பக்த கோடிகளும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது குறித்து கோவில் செயல் அலுவலர் கூறும்போது வரும் ஏப்ரல் 30 மே 1 அன்று ஸ்ரீ கௌமாரியம்மன் அக்னி சட்டி ஆயிரம் கண் பானை அழகு குத்துதல் பால்குடம் எடுத்தல் ஆகிய திருவிழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது என்றார்.