கச்சகட்டியில் ஆகாயதாமரை முளைத்து அவலமாக காட்சியளிக்கும் நீலமேகபெருமாள் கோவில் தெப்பகுளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
வாடிப்பட்டி அருகே கச்சகட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த நீலமேகபெரூமாள் திருக்கோலில் முன்பு உள்ள நோய் தீர்க்கும் தெப்பக்குளத்தில் ஆகாயதாமரை முளைத்து மணல் மேடாக மாறிய உள்ளதால் குளத்தை சீரமமைத்து தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க.ஆன்மீகவாதிகள் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளர்..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் அமைந்துள்ள கச்சகட்டி கிராமத்தில் அனைத்து சமுதாய மக்கள் வழிபாடு செய்து வரும் பழமை வாய்ந்த நீலமேக பெருமாள் திருக்கோவில் அமைந்து உள்ளது.இக்கோவில் முன்பு உள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான நோய் தீர்க்கும் தெப்பக்குளம் உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாடு செய்து நீராடி சென்றால் பல்வேறு நோய் உள்ளிட்ட வினைகள் தீர்ந்து போனாதாக பொதுமக்களிடையே அதீத நம்பிக்கை இருந்த வந்த நிலையில் தற்போது தெப்பக்குளத்தில் உள்ளே ஆகாய தாமரை முளைத்து மணல் மேடாக மாறி சுகாதார சீர்கேடாகி மாறி கொசு உற்பத்தி மையமாக உள்ளது
மேலும் கோவில் தெப்பகுளத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுமலை ஓடை நீர் நீரால் தண்ணீர் நிரப்பி வந்த நிலையில் தற்போது குளத்தின் நீர் வழிப்பாதை மற்றும் குளத் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் சென்று வருகின்ற அவல நிலை நீடித்து வருகின்றது.
இக்குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தெப்பக்குளத்தை சீரமைத்து தண்ணீர் நிரப்பி நடவடிக்கை எடுக்க ஆன்மீகவாதிகளுமம் உள்ளூர் பொதுமக்களும் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.