பாபநாசம் அருகே அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் திருநடன திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் சரபோஜிராஜபுரம் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் திருக்கோயில் ஆலயத்தின் திருநடன திருவீதியுலா காட்சி நடைபெற்றது.

குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து மேள தாளங்கள் முழங்க அக்னி சட்டியை கைகளில் ஏந்திவாரு, திரு நடனம் ஆடியவாரு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *