மதுரை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் இணை இயக்குநர் டாக்டர் எஸ். ராஜாமணியின் பணி நிறைவடைந்து ஓய்வு பெற்றதற்கான பாராட்டுவிழா நடைபெற்றது.
விழாவில் ஓய்வு பெறும் எனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை நான் தொடங்கும் வேளையில், எனது அரசுப் பணி முழுவதும் நீங்கள் எனக்கு அளித்த தளராத ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் இருப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என டாக்டர் ராஜாமணி தெரிவித்தார். விழாவில் மருத்துவக்கல்லூரி மாணவமாணவியர் பேராசிரியர்கள் டாக்டர்கள் கலந்து கொண்டு பிரியாவிடையளித்தனர்.