அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் மதன்ஜெயபாலன், மை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் தொடர்ந்து பேசிய அவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் செந்தமிழர் சீமானின் அன்பு தம்பியாகிய நான் உங்களுக்காக உழைத்திட தயாராக இருக்கிறேன் தலைவர் சீமான் நமது தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தி உள்ளார் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்ய தயாராக உள்ளோம் ஆனால் திமுக அதிமுக கட்சிகளும் மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் மோடி அரசாங்கமும் ஆண்ட கட்சிகள் அவர்கள் கொள்ளையடித்து பல்லாயிரம் கோடி பணம் வைத்துள்ளனர்

பொதுமக்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்து குறுக்கு வழியில் வெற்றி பெறலாம் என கட்சியின் வேட்பாளர்களை களம் இறக்கி அவர்களது கட்சியின் தலைவர்கள் நிறுத்தியுள்ளனர் எவ்வளவு பணம் கொட்டி கொடுத்தாலும் இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம் வெற்றி பெறுவது உறுதி இப்பகுதியில் தேவைப்படும் பல திட்டங்களை பெற்றுத்தர உங்களின் அனைத்து வாக்குகளையும் மைக் சினத்துக்கு வாக்களித்து அமோக வெற்றியை தரும்படி அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அவருடன் சோழவந்தான் தொகுதி தலைவர்சங்கிலிமுருகன், செயலாளர் சக்கரபாணி, பொருளாளர் சதீஷ்குமார், மற்றும் திருப்பதி, கண்ணதாசன், குப்புசாமி, கொண்டையம்பட்டி கிளை நிர்வாகி விக்னேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *