அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேனி பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது மனைவி அனுராதா தினகரன் அப்பகுதியில் திறந்த வேனில் பொதுமக்களிடம் குக்கர் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்

தொடர்ந்து அவர் கூறியது தேனி தொகுதி அவருக்கு அறிமுகமான தொகுதி புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா இருந்தபோது பல்வேறு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார் உதவி என்று யாரும் கேட்டாலும் உடனே ஓடோடி செய்யக்கூடிய எனது கணவர் உங்கள் வீட்டுப் பிள்ளை அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் 15 ஆண்டுகள் அவரை விட்டு விட்டீர்கள் இப்போது உங்களுக்காக உழைத்திட உங்கள் முன்னாள் வந்து வேட்பாளராக நிற்கிறார் அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் இப்போது தேனி பாராளுமன்ற தொகுதியில் சோழவந்தான் தொகுதி இணைந்துள்ளது

இதற்கு முதலில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது சோழவந்தான் திண்டுக்கல் உடன் இருந்தது ஆகையால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அறிமுகம் இல்லை இப்போது தங்கள் பகுதிக்கு நல்ல அறிமுகம் கிடைத்துவிட்டது

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்திட மறந்திடாமல் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றியை தரும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்

அவருக்கு மகளிர் அணி சார்பாக ஆழ் உயர மாலை அணிவித்தனர். முன்னதாக அய்யங்கோட்டை, எல்லப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார் அவருடன் மாநில நிர்வாகிகள் மண்டல பொறுப்பாளர்கள் தேர்போகிபாண்டி, வழக்கறிஞர் பிரிவு டாக்டர் செந்தில்குமார் சோழவந்தான் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் கோடீஸ்வரன் அலங்காநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சம்பகுளம்.வ.ரகு, இணைச் செயலாளர் மதிவாணன், மாணவியரணி செயலாளர் ஜீவிதா நாச்சியார், கரூர் மாவட்ட செயலாளர் தங்கவேல், செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர்குருமுருகானந்தம், மற்றும் காரைக்குடி ரமேஷ், சரவணன், தஞ்சை பாலு, மற்றும் கோவிலூர் செந்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *