தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் வில்லாபுரம் கிளை சார்பாக ரம்ஜான் பண்டிகை யோகா சிவா பள்ளியில் நடைபெற்றது தமிழ்நாடு தவழும் மாற்றத் திறனாளிகள் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார் விழா ஒருங்கிணைப்பாளர் மதுரை மாவட்ட செயலாளர் ராவியத் பேகம் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட தலைவர் சுரேஷ் பாண்டியன், துணை தலைவி உமா மகேஸ்வரி சிறப்பு உரையாற்றினார்கள்.மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஈஷா ஹோம் கேர் ஜோதி அம்மா சமூக சேவகர் சேக் மஸ்தான் நூருல்லா மற்றும் அஸ்கிரைப் ஹெச் ஆர் உரிமையாளர் ரோஸாலி மேடம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவிற்கு வந்து மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கினார்.

அனைவருக்கும் இனிப்புகள், உணவு வழங்கப்பட்டது. விழாவினை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *