விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளனர் அவர்களுக்கான வாக்கு சாவடி சுமார் 10 கிமீ தூரம் உள்ள ராஜூஸ் கல்லூரியில் உள்ளது அவர்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அமர்த்தப்பட்ட வாகனத்தில் அழைத்து வந்து வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. ராஜபாளையம் வட்டாட்சியர் ஜெயபாண்டி தலைமையில் வருவாய் துறையினர் ஏற்பாடுகளில் செய்திருந்தனர்.