எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆதி இராகுஸ்தலமான நாகேஸ்வரமுடையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.
சீர்காழி கடைவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பொன்னாகவல்லி உடனாகிய நாகேஸ்வரமுடையார்கோயில் உள்ளது. இக்கோயில் ஆதிஇராகுஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு தனிசன்னதியில் இராகு பகவான் அருள்பாலிக்கிறார்.இந்த கோயிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மஞ்சள்,திரவியபொடி,பால்,தயிர், தேன்,பன்னீர்,பஞ்சாமிர்தம்,விபூதி,சந்தனம் முதலான நறுமன திரவியபொருட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் நாகேஸ்வரமுடையார்,நந்திபகவானுக்கு சிறப்பு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.