அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் கிழக்கு தெரு கவுண்டர் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட
ஸ்ரீ அழகுமலையான் ஸ்ரீ கருப்புச்சாமி
ஸ்ரீ சௌந்தரியம்மன் கோவில் மகா சம்ப்ரோட்சன விழா நடைபெற்றது
முதல் நாள் நிகழ்ச்சியாக ஊத்துக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர் அதனை தொடர்ந்து மாலை அணுக்கை விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி திக்பந்தனம், கலாகர்சனம் முதல் கால யாக பூஜை, மற்றும் பூர்வாங்க பூசை வேதாரண்யம், மற்றும் ஏழு விதமான யாகங்கள் நடைபெற்றது.
இரவு பூர்னாகுதி சதுர்வேதம், திராவிடவேதம், ஆசீர்வாதம், தீப ஆராதனை, நடைபெற்றன மறுநாள் காலை திங்கட்கிழமை அன்று மண்டப சாந்தி, கோ பூஜை, தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி ஸ்ரீ லட்சுமி பூசை, குலதெய்வ ஹோமம், திரவ்யாகுதி நடைபெற்றன அதனை தொடர்ந்து பூர்னாகுதி,
சதுர்வேதம், தீப ஆராதனையும் நடைபெற்று.
சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் இவ்விழாவில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது” விழாவிற்கான ஏற்பாடுகளை
முடுவார்பட்டி கிழக்குத்தெரு கவுண்டர் பங்காளிகள் செய்திருந்தனர்