இந்திய பெண்களின் தாலி கலாச்சாரத்தை மோடி கேலி செய்வதா தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி கண்டனம்

சென்னை விமான நிலையத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீன சையத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியா பாரம்பரியம் மிக்க தேசம். இதற்கு எதிர் மறையாக பா.ஜ.க. உள்ளது. ராஜஸ்தானில் பெண்களின் தாலி குறித்து பிரதமர் மோடி கேலி செய்து உள்ளார்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் நாட்டில் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து உள்ளது. மனிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு வானதி சீனிவாசன் குரல் கொடுத்தது உண்டா?

மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், ஸ்மிதி ராணி பெண்களுக்கு எதிராக நடக்கும் போது குரல் தராதது ஏன்?

தமிழகத்தில் பா.ஜ.க.வின் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை மக்களிடம் எடுத்து செல்லப்படும்.

ஜுன் 4ந் தேதி தேர்தல் முடிவுக்கு பின் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தப்படும்.

தமிழகத்திற்கான முன்னெடுப்புக்கு பிரதமர் ஆதரவாக இருந்ததில்லை. தென் மாநிலங்களில் வளர்ச்சிக்கு எதிராக மோடி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் விஜயதாரணிக்கு முக்கியத்தும் தரப்பட்டது. அவர் ஆசைப்படாமல் பேராசைப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *