மேகமலையில் தீ விபத்து
தேனி மாவட்டம் மேகமலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி மணலாறு தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு இரண்டு வீடுகள் முற்றிலும் தீயில் கருகி சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் மேகமலை பகுதியில் ஏழுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. தீயை அணைப்பதற்கு தீயணைப்புத் துறையின் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.