காஞ்சிபுரம் அஷ்டபூஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கோலாகலம்
காஞ்சிபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் மறு சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது.
இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஷ்ட பூஜா பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததால் பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி மே மாதம் ஐந்தாம் தேதி வரை வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.
முன்னதாக என்று திருமஞ்சனம் நடைபெற்று சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளி தொடர்ந்து கொடியேற்றும் விழா விமர்சியாக நடைபெற்றது. வருகின்ற 25ஆம் தேதி கருட சேவை, 26 ஆம் தேதி சந்திர பிரபை , 27 ஆம் தேதி யாளி வாகனம் , 29ஆம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது .
தொடர்ந்து ஐந்தாம் தேதி வரை பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது. இறுதி நாளான ஐந்தாம் தேதி விடையாற்றி உற்சவத்தின் பொழுது பெருமாள் புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளி காட்சி தர உள்ளார். விழாவிற்கான ஏற்பாடு கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது