செங்குன்றம் செய்தியாளர்
நெல் மூட்டை ஏற்றி வந்த ஆந்திர லாரி தெருவோரம் படுத்திருந்த ஒரு நபரின் மீது தலையில் ஏற்றியதில் சம்பவ இடத்திலேய உடல் நசுங்கி இறந்தார் .
செங்குன்றம் அடுத்த காந்திநகர் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 31 )இவர் கூலி வேலை செய்தும் தெருவில் இருக்கும் காகிதங்களை எடுத்து கடையில்
போட்டு பணம் சம்பாதிக்கும் வேலையில் இருந்தார்.
இவர் நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு செங்குன்றம் ஜிஎன்டி சாலை காவல் நிலையம் அருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அது சமயம் ஆந்திர மாநில லாரி ஒன்று நெல் மூட்டைகளை ஏற்றிகொண்டு சாலையின் ஓரமாக நிறுத்துவதற்காக அங்கு வந்தபோது ஓட்டுனருக்கு கீழே படுத்திருந்த ஆள் தெரியாமல் இருந்ததால் அவர் மீது லாரியின் மூன் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே மணிவண்ணன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இது விவரம் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலலாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகர்
வழக்கு பதிவு செய்து ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரியை பறிமுதல் செய்து ,திருப்பதி நாயுடு பேட்டை ,நல்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற ஓட்டுநரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்த மணிவண்ணனுக்கு ஜெயலஷ்மி என்ற மனைவியும் மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.